தேசிய செயலாளர் நியமனம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர், மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முனைவர் பி. ராமசாமி அவர்கள், தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் அவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு தமிழ் சேவா சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், சிறந்த ஆன்மிக இறைப்பணி சேவையாளர் திரு. சு.பா .ஞானசரவணவேல் அவர்களைத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளராகவும் மத்திய ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் நியமனம் செய்துள்ளார்.
திரு சு.பா ஞான சரவணவேல் அவர்கள் தேசியத் திருக்கோவில்கள் கூட்டமைப்பின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும் இசைவு தெரிவித்துள்ளார் என்று இதன் மூலம் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் வைஜெயந்தி ராஜன் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.