திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது
திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி கோவை மாவட்டம் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக மாதம்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த மாதம் செப்டம்பர் மாதம் நிகழ்வாக கன்னிமார் திருக்கோயிலில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் திருமதி சுப்புலட்சுமி தலைமையில் சிறப்பு விருந்தினராக தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய துணை தலைவர் தவத்திரு சிவநந்தி சுவாமிகள் கலந்து கொண்டார்.

திருவாசக முற்றோதல் நிகழ்ச்சிக்கு திரளாக பலர் கலந்து கொண்டு திருவாசகத்தை பாடினர் மகளிர் பெருமளவு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இத்திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் சிறப்பாக வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது