ஆதீன உதவி கட்டளை சட்டநாதத் தம்பிரானுக்கு கோவிலில் நுழையத் தடை
உலகப் புகழ் பெற்ற திருநள்ளாறு தர்பார்னேஸ்வரர் திருக்கோவிலில் தமிழ் வருட பிறப்பன்று பாரம்பரியமாக நடைபெறும் பஞ்சாங்கவாசிப்பு நிகழ்ச்சியில் ஆன்மீக அன்பர்கள் பெண் பக்தர்கள் முன்னிலையில் அம்மன் சன்னதியில் கோவிலின் புனிதத்தைக் கெடுக்கிற வகையில் அருவருக்கத்தக்க, அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்த தர்மபுர ஆதீன உதவி கட்டளை சட்டநாதத் தம்பிரான் இன்று நடைபெற்ற (23.04.26) திருநள்ளாறு திருக்கோவில் பிரம்மோற்சவ விழாவின் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளதை பாராட்டி வரவேற்கிறோம்.
வைஜெயந்தி ராஜன்
தேசிய அமைப்புச் செயலாளர், புதுச்சேரி மாநிலத்தலைவர்.
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு