அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மற்றும் அறம் வளர்த்த நாயகி சேவை மையம் நாகை மாவட்ட நிர்வாகிகளால் தென்னம்புலம் அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது இந்த நிகழ்வை தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் மாநில பிரச்சார குழு துணைத் தலைவர் பட்டிமன்ற நடுவர் கீழையூர் S கண்ணன் ஐயா அவர்கள் தலைமையேற்றும் மாநில பொதுச் செயலாளர் N.T.கண்ணன் அவர்கள் கலந்து கொண்டும் கீழ்வேளூர் அமைப்பாளர் செந்தில் அவர்களும் வேதாரண்யம் மண்டல மகளிர் அணி தலைவர் உஷாரணி தர்மலிங்கம் அவர்களும் மற்றும் கூட்டமைப்பினுடைய அனைத்து மகளிர் உறுப்பினர்களும் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.